வெடுக்குநாறிமலை அடாவடித்தனத்தைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

0
118

வவுனியா- வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொலிஸாரை கண்டித்தும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் இன்று கண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் அடாவடித்தனத்தை எதிர்த்து மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு காந்தி பூங்காவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இந்து கிறிஸ்தவ மதகுருமார் கட்சி ஆதரவாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here