செஞ்சோலைக் சிறார்களின் மறக்கமுடியாத 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

0
206

எமது தேசத்தின் எதிர்காலச்சிற்பிகளாக உருவாக்கப்பட்ட எம் செஞ்சோலைக்குழந்தைகள் அநியாயமாக சிங்கள தேசத்தின் கோழைத்தனமான குண்டு வீச்சுக்கு உள்ளாகிய மறக்க முடியாத 17 ஆவது ஆண்டு நினைவேந்தலும் 10 கோடி தமிழர்கள் தமக்கெனவொரு தனிநாடு உருவாகி மற்ற இனங்கள் போல் நிம்மதியாக சுதந்திரமாக வாழவேண்டும் அதற்கான தடைகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களிடம் தமிழ்மக்களுக்கான நீதிகேட்டு தன்னை தானே தீக்குள் எரித்துக்கொண்ட மானத்தமிழிச்சி தோழர் செங்கொடி அவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவில் நெஞ்சில் ஏந்தி வணக்கம் செலுத்துவோம் வாரீர். தமிழ் இனத்துக்காக அதன் உயர்வுக்காக, நம் தலைநிமிர்வுக்காக தாம் வாழ்ந்து சாதிக்க வேண்டிய தம் வாழ்வையே எம் இனத்துக்காக எம்மை நம்பி உயர்வான உயிரை உவந்தளித்தவர்கள் இவர்கள். வருடத்தில் ஒரு முறை இவர்களை வணங்கி எம் வாழ்வை உறுதியாக்கிக் கொள்வோம் வாருங்கள்.
14.08.2023 திங்கட்கிழமை பி.பகல் 15.00 மணிக்கு Place de la Bastille . அனைவரும் வருக உங்கள் வரலாற்றுக்கடமையை செய்க !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here