இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2023

0
598

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2023 இன்று (15.07.2023 ) சனிக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்ப நிகழ்வாக லெப்டினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி முன்பாக சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

09.07.1997 அன்று உயிலங்குளம் நேரடிமோதலின்போது வீரச்சாவடைந்த 2ம் லெப்டினன் இளந்தேவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை

16 07.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் ஊடுருவி எடித்தாரா கப்பலினை தாக்கி வீரச்சாவடைந்த லெப்.கேணல் நரேஸ் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிறித்தே பகுதியில் ஆரம்பமான குறித்த போட்டிகள் இன்று சனிக்கிழமை சார்சல் பகுதியில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து நாளை 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க அனவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here