லண்டனில் இருந்து தாயகம் சென்ற 6 வயது சிறுவன் மருதங்கேணி கடலில் மூழ்கிப் பலி!

0
89

லண்டனில் இருந்து பெற்றோருடன் யாழ் வந்த 6 வயது சிறுவன் மருதங்கேணி கடலில் மூழ்கி மரணம்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், 7 – 7-2023 இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது குருபரன் ஆரிஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here