கனடாவில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் உயிரிழப்பு!

0
94

கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த யாழைச் சேர்ந்த இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் காணாமல்போனவுடன் 20 படகுகளும் 50 தனி நபர்களும் இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதுடன் ஒன்றாரியோ மாகாண காவல்துறையினரும் இவரைத் தேடும் முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படுகின்றது,

அதேவேளை உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பயணித்த படகு ஆழமற்ற நீரில் நுழைந்ததால் வேகமாக ஓடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குறித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here