முல்லைத்தீவில் மேலும் பல மனித எச்சங்கள்: அச்சத்தில் மக்கள்!

0
122

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன.
குறித்த அகழ்வு பணிகளின் போது மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நேற்று ஆரம்பமான அகழ்வு பணியின்போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, பிளாஸ்ரிக் பொருள், வையர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வில் 13 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வுப் பணிக்காகத் தற்காலிக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here