வவுனியா A9 வீதியில் கோர விபத்து; இளைஞர் ஒருவர் பலி!

0
117

இன்றைய தினம் (05) புதன்கிழமை காலை வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை உந்துருளி முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

விபத்தில் 600 மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச்சென்றுள்ளாதாக காவல்துறை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் உந்துருளி சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதி வேகத்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா காழல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here