பிரான்சில் இசைவேள்வி – 2023 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது!

0
246

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2023 போட்டிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

இந்நிகழ்வில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 23.06.1989 அன்று வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் முருகேசு ஐயா அவர்களின் மகள் ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

இன்று (17.06.2023) சனிக்கிழமை மற்றும் நாளை (18.06.2023) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இன்று17-06-2023 சனிக்கிழமை வீணை – மிருதங்கம் தனிநபர் (காலை 09:00 மணி), குரலிசை குழு (12:00 மணி), வயலின் – குழு (15:00 மணி )

—————————————

நாளை (18-06-2023) ஞாயிற்றுக்கிழமை குரலிசை – தனிநபர் (காலை09:00 மணி), வயலின் – தனிநபர் (16:00 மணி)

இடம் (இரண்டு நாட்களும்)

Lieu : 08 Rue de la philosophie 93140 Bondy RER / E Bondy – BUS (303) les marnaudes Tram (4) les coquetiers

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-ஊடகப்பிரிவு)

(படங்கள்: யூட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here