மன்னாரில் முச்சக்கரவண்டி விபத்து: கணவன் பலி; மனைவி பிள்ளைகள் படுகாயம்!

0
81

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை 11 மணியளவில் மகேந்திரா ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட 9, 6, 4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்கலாக ஐவர் நாளைய இடம்பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் நோக்கிச் சென்றுள்ளனர் .

இந்த நிலையில் மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதியான கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

அதேநேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here