பிரான்சு துலுஸ் மாநகரத்தில் இடம்பெற்ற மே 18 இன் 14 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

0
158

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த மே 18 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 16.00 மணிக்கு துலுஸ் மாநகரத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் துலுஸ் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் துலுஸ் வாழ் தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியதுடன், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசம் எழுப்பினர்.

வெளிநாட்டு மக்களுக்கு பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் மாணவர்களால் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here