பெருந்தோட்டக்கைத்தொழில்துறை முன்னாள் ராஜாங்க அமைச்சர் கே வேலாயுதம் காலமானார்!

0
255

k.velauthamபெருந்தோட்டக்கைத்தொழில்துறை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயும் இன்று மாலை 5மணியளவில் தமது 65வது வயதில் காலமானார்.
தமிழகத்தின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை அவர் சேவையாற்றினார்

இதன்பின்னர் 2014ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்

இதன்போதே அவர் பெருந்தோட்ட கைத்தொழில்துறை ராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இதேவேளை, 1988ஆம் ஆண்டு 2001ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2004முதல் 2014 வரை அவா ஊவா மாகாணசபை உறுப்பினராக பதவிவகித்தார்.

அத்துடன் 47 வருடங்களாக ஐக்கிய தேசியக்கட்சியின்,  இலங்கை தேசியத்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் முதன்மை உறுப்பினராகவும் அங்கம் வகித்து வந்த அவர் 15வருடங்களாக அதன் பொதுச்செயலாளராகவும் பதவிவகித்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here