ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரைனுக்குத் திடீர்ப் பயணம்!

0
110

ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரைனுக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி வொலோடமிர் செலென்ஸ்கி கிஷிடாவை உக்ரைனுக்கு வருகை தரும்படி கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுத்திருந்தார்.

தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசவிருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர். போலந்திலிருந்து கிஷிடா ரயிலில் செல்லும் காட்சியை என்.எச்.கே தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர் நேற்று (21) பின்னேரம் கீவ் சென்றுசேர்ந்தார். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல தலைவர்களும் உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here