அம்பாறையில் இருந்து சுற்றுலா சென்ற 4 இளைஞர்கள் உயிரிழப்பு!

0
85

இலங்கையின் வெல்லவாய பகுதியில் உள்ள எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் நேற்று (21) காணாமல் போயிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து சுற்றுலா சென்று நீராடச்சென்ற 4 இளைஞர்களே இவ்வாறு நேற்று செவ்வாய்கிழமை (21) காணாமல் போயிருந்தனர்.

அதில் ஒருவரின் உடல் மரணித்த நிலையில் நேற்றே மீட்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மற்றைய 3 பேரினதும் சடலங்கள் இன்று புதன்கிழமை, 22 ஆம் திகதி மீட்கப்பட்டன.

இதற்கு கடற்படையின் உதவியும் பெறப்பட்டிருந்தது.

இவர்கள் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறைப் பிரதேசங்களைச்சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் எனத் தெரியவருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here