சுவிசு லவுசான் நகரில் இருந்து நாளை ஜெனிவா நோக்கிப் பயணிக்கவுள்ள ஈருருளிப் போராட்டம்!

0
60

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்காப்பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த 1ம் திகதி மாலை சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

அதன் தொடர்ச்சியாக சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல் (Basel) பாசல் லாண்ட் ( Basel-Landschaft), சொலத்தூண் ( Solothurn ) பேர்ண் (Bern) பிறிபேர்க் ( Fribourg ) மாநிலங்கள் ஊடாக 206 கிலோமீற்றர் தூரம் பயணித்து வோ (Vaud) மாநிலத்தின் நகராகிய லவுசானில் (Lausanne) இன்றைய நாள் நிறைவடைந்துள்ளது.

நீதி கோரிய பயணம் நாளை காலை லவுசான் (Lausanne) நகரில் ஆரம்பித்து மாலை ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. முன்றலில் நிறைவடையும்.

சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற எம்தமிழ் உறவுகள் அனைவரும்
ஈருருளிப்பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன் திங்கட்கிழமை (06.03.2023) 14:00 மணிக்கு இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப்போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொள்ளுமாறு
‌உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here