யாழ்.கோப்பாய் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பலி!

0
76

யாழ் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்பாக சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டமையால் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியில் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.

மயக்கம் அடைந்தவர் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றுமுன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கை சேர்ந்த 23 வயதுடைய பவிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து சாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here