யாழ்.பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாவடைந்தார்!

0
123

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடல்நலப் பாதிப்பால் காலமானார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவர் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.

2019 ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் மென்போக்கை கடைப்பிடிப்பதால், அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டே அவர் பதவி நீக்கப்பட்டார்.

இவர் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். துணைவேந்தர் காலப்பகுதியில் மட்டுமல்ல தனது பல்கலைக்கழக தொழில் வாழ்வு காலங்களில் குறிப்பிடத்தக்க தமிழ்த் தேசியக் காரியங்களை அவர் ஆற்றியவர்.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதியாகவும் அவர் பதவி வகித்தவர். கடும் உழைப்பு மற்றும் குடும்ப வறுமையைத் தாண்டி முன்னேற முடியும் என மெய்ப்பித்த பெருமனிதரான பேராசிரியர் விக்னேஸ்வரன் மாரடைப்பால் நேற்று (17) வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here