தெ.கி.பல்கலைக்கழகம்: 13 மாணவர்கள் கைது; 20வரை விளக்கமறியல்!

0
156

tkn-southern-univercity-pgiதென்கிழக்குப் பல்கலைக்கழகத் தின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் சட்ட விரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை போன்ற குற்றச் சாட்டுகளின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட 13 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.முகம்மது  உத்தரவிட்டார்.

கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் விடுதி வசதி ஏற்படுத்தி தருமாறு கோரி பாரியளவிலான ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களினால் பல்கலைக் கழகத்தினுள் விடுதி வசதி அமைத்துத் தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இதனை யடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பேரிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி உவைஸர் ரஹ்மான் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here