தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப் பயணம்!

0
98

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப்பயணம்!

தமிழின அழிப்பிற்கு

நீதி கோரித் தொடரப்படும் 

பயணமானது, பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து Conservative, Labour கட்சிகளின் தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எமது நீதிக்கான காத்திரமான பங்களிப்பை வலியுறுத்தியவாறு தொடரும் பயணமானது, Liberal Democrats கட்சியின் தலைவருடன் Kingston பணியகத்தில் அரசியற் சந்திப்பை 

மேற்கொண்ட பின்னர், ஹொலண்ட் வழியாக ஐரோப்பிய நாடுகளைக்

கடந்து ஜெனிவாவை சென்றடையவுள்ளது. 

அனைத்து உறவுகளையும் இன்று 17/02/2023 வெள்ளி காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக வருமாறு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு க்குழு அரசியற்பிரிவு அழைப்பு விடுத்துளளது.

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here