ஆஸ்திரேலியாவில் யாழ் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஆற்றில் மூழ்கி பலி!

0
126

img_0783_0தெற்கு ஆஸ்திரேலியாவின் Renmark பகுதியில் மரே ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன பரத் என்ற புகலிடக்கோரிக்கையாளரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரிய பரத் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவராவார்.

21 வயதான பரத்தின் பெற்றோர், இரு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோர் இலங்கையில் வசிக்கிறார்கள். நேற்று தனது நண்பர்களோடு கரப்பந்து விளையாடிய பரத் பின்னர் மரே ஆற்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார். நீருக்குள் இறங்கிய 2 நிமிடத்திற்குள்ளேயே பரத்தை நீர்ச்சுழி இழுத்துச் சென்றதாக அவரோடு இருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

நேற்றுப் பிற்பகல் 3.45 மணியளவில் நீரில் மூழ்கியிருந்த பரத்தைத் தேடும் பணியில் பொலிஸாரும் அவசர சேவைப் பிரிவினரும் பல மணிநேரங்களாக ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை பரத்தின் உடலை இலங்கைக்கு அனுப்ப தாம் தீர்மானித்துள்ளதாக பரத்தின் நண்பர்களில் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here