உலக ஆசிரியர் தினத்தையும் 70ஆவது ஆண்டு சாரணர் நிறைவு தினத்தையும் முன்னிட்டு இன்று யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாரணர்களுக்கான பயிற்சி நிலைய மண்டபம் இன்று யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டு சாரணராக திறமையாகவும் பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வந்த அமரர் ஜெயக்குமார் கீர்த்தீகன் ஞாபகார்த்தமாக பாடசாலை சமூகத்தினர், மற்றும் பெற்றோர்களின் முழுநிதிப்பங்களிப்புடன் குறித்த கட்டடம் ரூ.05 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன்,மற்றும் யாழ். மாவட்ட சாரணர் ஆணையாளர் தேவராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்தனர்..
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா, பாடசாலை சமூகத்தினர்கள்,கல்விமான்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.