யாழில் இன்று நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு போட்ட நீதிமன்று!

0
77

யாழ்ப்பாணம் மாநகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சிறிலங்கா சுதந்திரதின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத் தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலா சார நிலையத்தில்இன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கிறார்.

இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், இந்த போராட்டத்துக்குத் தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி க. சுகாஷ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு கோரப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் காவல்துறையினரின் விண்ணப்பத்தை முகத் தோற்றளவில் ஏற்று தடை கட்டளையை வழங்கினார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here