ரணிலின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு; நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

0
74

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த அழைப்பை விடுத்துள்ளது.

தேர்தலுக்கு பணம் இல்லை

இது குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

”பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் சுதந்திர தினம் இரண்டாவது தடவையாக செய்யவேண்டிய தேவை ஏன்?

தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பும் முகமாக தனது கருத்தை பதிவு செய்ந்திருந்தார்.

பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு

குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நாளைய தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பங்கேற்குமாறு பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here