பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சிப் பட்டறை கடந்த 03.10.2015 சனிக்கிழமை nanterre பகுதியில் இடம்பெற்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறையில் அனுவம்வாய்ந்த ஓவியப் பயிற்றுநர்கள் கலந்து நிகழ்வினைச் சிறப்பித்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றனர்.
இவ்வாறான பட்டறைகள் மிகவும் அவசியம் என பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இவ்வாறான பயிற்சிப் பட்டறைகளைத் தாம் நடாத்த திட்டமிட்டிருப்பதாக பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.