போதைப் பொருள் பணம் செலுத்த தவறிய இரு இளைஞர்கள் கொன்று புதைப்பு!

0
155

ரம்புக்கனை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களும் போதைப்பொருள் பெற்று பணத்தை செலுத்தத் தவறியமைக்காக சில வாரங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

சந்தேக நபர்கள் இளைஞர்களை கொன்று அதே தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் இளைஞர்களை கொன்று தோட்டத்தில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஏனைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here