சிட்னியைபோல் பெல்ஜியம் நகரில் குடியிருப்பை சுற்றி வளைத்த 4 தீவிரவாதிகள்

0
219
beljijamபெல்ஜிய நகரம் கெண்ட் பகுதியில் இன்று  ஒரு குடியிருபு பகுதிக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம ஆசாமிகள்  அந்த புகுதி முழுவதையும்   சுற்றி வளைத்து தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்து உள்ளனர். என அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.ஆனால் இது வரை எந்த  கோரிக்கைகளும் வரவில்லை எனவும் இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
 போலீசார் வரவழைக்கபட்டு அந்த பகுதி முழுவதும் குவிக்கபட்டு உள்ளனர்.  குடியிருப்பை சுற்றிவளைத்து உள்ள ஆசாமிகளுக்கு என்ன கோரிக்கை என்ற விவரம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து செய்தி தொடர்பாளர் அன்னிமி செர்லிபின்ஸ் கூறும் போது சிட்னி போன்றே இங்கேயும் குடியிருப்புகளுக்குள் உள்ளவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்க்பட்டு உள்ளனர் எனதெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here