உம் போர் அறிவுத்திறனை வீரத்தை உலகம் வியக்கும் மாவீரரே!

0
162

உலகம் வியக்கும் மாவீரரே!

யாரைப் போலும் இல்லை -இவர்கள்
இவர்களுக்கு நிகர் இவர்களே தான்
ஈழத்தின் காற்றும் நீரும்- ஏன் இயற்கையே சொல்லத் துடிக்கும் இவர்கள் தம் ஈகத்தை.
புலத்தில் தமிழர்கள் மட்டுமா
வேற்று இன மக்களும் கூறுவர் இவர்கள்
வீரத்தை ஈகத்தை.
உலகின் இராணுவ கற்கைக் கூடங்களிலும்
பொறியியலாளர் கற்கைநெறியிலும் விண்ணுந்து பொறியியலிலும் வியந்து கற்பிப்பார் எடுத்துக்காட்டுடன்- எம் இனத்திற்காக வீர வித்துக்களான மாவீரரின் போர் அறிவுத்திறனையும் வீரத்தையும்
உலகம் வியக்கும் மாவீரரே!

இளவாலையூர் கவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here