நல்லூர் பெருந் திருவிழாவில் 30 பவுணுக்கு மேல் கொள்ளை: பலர் கைது!

0
123

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவில் இதுவரை சுமார் 30 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப் பவனி நேற்று இடம்பெற்றது.

இதனால் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சன நெரிசலை சாதகமாக்கிய திருடர்கள் தங்கள் கைங்கரியத்தைக் காட்டினர்.

2 தாலிக் கொடி மற்றும் சங்கிலிகள் உள்பட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டன

என நல்லூர் உற்சவகால பொலிஸ் காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கோப்பாயைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here