சூடான் நாட்டில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 176 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.
சூடானின் தலைநகரான ஜீபாவிற்கு மேற்கே ஈகுடோரியா என்ற பகுதியில் பெட்ரோலை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது சாலையில் ஓடிய பெட்ரோலை பிடிக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
அந்த நேரத்தில் திடீரென லொறி வெடித்து சிதறியதில், 176 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இவர்களின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.