வவுனியாவில் தொடருந்து மோதியதில் இளம்குடும்பஸ்தர் பலி!

0
107

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார்,

இன்று திங்கட்கிழமை மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடருந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் – அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் வவுனியா காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து காரணமாக சில மணி நேர தாமதத்தின் பின்னரே புகையிரதம் தனது பயணத்தை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here