கிளிநொச்சி: அம்பாள் குளத்தில் 19 வயது இளைஞரின் சடலம்!

0
254

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்வம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here