வவுனியாவில் கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்!

0
291

வவுனியாவில் பாரவூர்தி ஒன்று கட்டுப்பாடற்ற வேகத்தினால் வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த உந்துருளி மீது மோதிய பின்னர், வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை மதியம் வவுனியா ஏ 9 வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

வவுனியா ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த உந்துருளி மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியாகியதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here