யாழில் பட்டப்பகலில் மாணவியைக் கடத்திய கும்பல்; மற்றொரு மாணவி மாயம்!

0
190

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப்பிடித்து வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்ற குழுவை இளைஞர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்துள்ளது.

யாழ் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பேருந்தில் வரும் மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

பேருந்தில் வந்து இறங்கிய மாணவியை தாயாரின் கண்முன்னே வாகனத்தில் வந்த குழுவினர் கடத்த முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்களால் வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

கடத்தல் குழுவை பிடித்த இளைஞர்கள் சரமாரியாக நையப்புடைத்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன் நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தற்போது பல இடங்களில் சிறுவர்கள் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை,

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர்நேற்று மாலை காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here