குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள்:பாரிஸ் புறநகரில் பெண் கைது!

0
79

பாரிஸின் வல்-து-மான் பகுதியில் Marolles-en-Brie என்ற நகரில் வீடு ஒன்றில் உறைகுளிர்சாதனப் பெட்டிக்குள் (congél
ateur) இருந்து இரண்டு சிசுக்களின் உடல்
களைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். அந்த வீட்டில் வசிக்கும் முப்பது வயது
டைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்
டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பெண்ணுடன் அதேவீட்டில் இணைந்து வசிக்கின்ற ஆண் ஒருவரே வீட்டில் இருந்த குளிர் சாதனப் பெட்டிக்குள் இரண்டு சிசுக்களின் சடலங்கள் உறை
ந்த நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாகப் பொலீஸாருக்குத் தகவல் வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகி
றது.

இரண்டு சிசுக்களும் எப்போது இறந்தன
என்பது தெரியவரவில்லை. அவை இரட்
டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று
பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.அது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தகவலை வழங்கிய ஆண் ஒரு பொலீஸ்
உத்தியோகத்தர் என்றும் அவருக்கும்
கைதான பெண்ணுக்கும் குழந்தைகள்
இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்
ளது. இரண்டு சிசுக்களும் அந்தப் பெண்
ணின் முந்தைய கணவருடையவையாக
இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கும்
பரிஷியன் செய்தி நிறுவனம் மேலதிக
விசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

குமாரதாஸன். 20-03-2022
பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here