சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு தர அமெ. ஆலோசனை!

0
359

வான் தளங்களை அழிக்க ரஷ்யா குறி

போலந்திடம் உள்ள சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கு
வது தொடர்பில் அந்த நாட்டுடன் அமெரி
க்கா பேச்சு நடத்திவருகிறது.”வான்பறப்பு
தடை வலயம் ஒன்றை அறிவியுங்கள், அல்லது, போர் விமானங்களைத் தாருங்
கள் “என்று உக்ரைன் அதிபர் வோலோ
டிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky)
அமெரிக்க செனட்டர்களிடம் அவசர
கோரிக்கை விடுத்திருந்தார். நவீன யுத்த விமானங்களை விடவும் தங்களது விமா
னிகளுக்குப் பரீட்சியமான – இலகு
வாக அவர்களால் இயக்கக் கூடிய – விமானங்களைத் தருவதே பயனுடையது என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதனை அடுத்தே,அதிபர் ஜோ பைடன்
போலந்து அரசுடன் இது தொடர்பில்
பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.சோவியத்
காலத்து – பழைய “மிக் -29″(மிக்-29) போர்
விமானங்களையும்”Su-25″ தாக்குதல் விமானங்களையும் உக்ரைனுக்கு வழங்
குவதற்கு உடன்பாடு எட்டப்படவுள்ளது.

போலந்து தன்வசம் உள்ள விமானங்
களை உக்ரைனுக்கு வழங்கும். அதனால்
ஏற்படுகின்ற வெற்றிடத்தை அமெரிக்கா
தனது விமானங்களைப் போலந்துக்கு வழங்கிச் சரிசெய்துகொள்ளும் வகை
யில் உடன்பாடு அமையவுள்ளது. இதே உத்தரவாதங்களின் அடிப்படையில் பல்
கேரியா, ஸ்லோவேனியா ஆகியனவும் தம்வசம் உள்ள பழை விமானங்களை உக்ரைனுக்கு வழங்க ஆயத்தமாக உள்
ளன. இந்த விமானப் பரிமாற்ற உடன்பாட்
டுக்கு அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்பு
தல் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

மேற்குலகின் போர் விமானங்கள் கிடைப்
பதற்கு முன்பாக உக்ரைன் படைகளது வான் தளங்களை அழிப்பதில் ரஷ்யா
குறியாக உள்ளது. தலைநகரில் இருந்து
200 கிலோ மீற்றர்கள் தொலைவில்
உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள
வின்னிற்சியா (Vinnytsia) நகர விமான
நிலையத்தை ரஷ்யப்படைகள் குண்டு
வீசித் தாக்கியுள்ளன.

உக்ரைன் நாட்டின் போர் விமானங்கள்
தங்கிச் செல்ல ருமேனியா இடமளிப்ப
தாகக் குற்றம் சுமத்தியுள்ள ரஷ்யா அது
போரில் ஒரு தலையீடாகவே பார்க்கப்
படும் என்று எச்சரித்துள்ளது.

*முந்திய வரலாறு :

அணு ஆயுத பலத்தில் இங்கிலாந்தை
விஞ்சியதாக இருந்த உக்ரைன் இன்று
பழைய சோவியத் விமானங்களைக் கேட்டு உலகிடம் கையேந்தும் நிலை
உருவானதுக்கு புடாபெஸ்ட் உடன்படிக்
கையும் (Budapest Memorandum) ஒரு காரணமாகும்.

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில்
இருந்து பிரிந்த பிறகு 1994 டிசெம்பரில்
ஹங்கேரி தலைநகரில் அணுவாயுதக்
குறைப்புடன் தொடர்புடைய முக்கிய
உடன்படிக்கை ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, உக்ரைன், பெலா
ரஸ், கசகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள்
ஒப்பமிட்டன.இந்த உடன்படிக்கை வழங்
கிய உத்தரவாதத்தின் பேரிலேயே உக்
ரைன் தனது வசம் இருந்த பெரும் அணு
வாயுதக் கிட்டங்கியை ரஷ்யாவிடம்
ஒப்படைப்பதற்கு இணங்கியது.

உலகின் அணு வல்லரசுகளாக இருந்த
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து
மூன்று நாடுகளும் இந்த உடன்படிக்கை
யில் உக்ரைனின் “சுதந்திரம் மற்றும் இறையாண்மையையும் அதன் அப்போ
தைய எல்லைகளையும் மதிக்கவும் ” மற்றும் நாட்டிற்கு எதிரான “அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும்” உறுதியளித்தன.தன் வசம் இருந்த சுமார் ஆயிரத்து 900 மூலோ
பாய அணு ஆயுதங்களை உள்ளடக்கிய உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயு
தக் களஞ்சியத்தைக் கைவிடுமாறு உக்
ரேனிய அரசாங்கத்தை வற்புறுத்துவதில் அந்த உறுதிமொழிகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்த உடன்படிக்கையை மீறியே 2014
இல் ரஷ்யா உக்ரைனின் ஒரு பகுதியா
கிய கிரிமியாவை ஆக்கிரமித்து தன்வ
சம் இணைத்துக் கொண்டது.உக்ரைன்
போர் பற்றிய விவாதங்களில் பலர் இந்த
புடாபெஸ்ட் ஒப்பந்த மீறலைக் குறிப்பிடத்தவறுவதை அவதானிக்க முடிகிறது.

        -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                           07-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here