மட்டு. சந்திவெளியில் 15 வயதுச் சிறுவன் மாயம்!

0
141

மட்டக்களப்பில் சந்திவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் வீட்டில் இருந்து  நிலையில் கடந்த  28ம் திகதி காணாமல்போயுள்ளதாக நேற்று புதன்கிழமை (2) பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதி ஜீவபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய அன்ரனி ஆனுராஸ் என்ற சிறுவன் சம்பவதினமான கடந்த மாதம் 28ஆம் திகதி வீட்டில் இருந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ளார் எனவும் கையடக்க தொலேபேசி கவரினுள் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா பணத்தை காணவில்லை எனவும் அவரை எங்கு தேடியும் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்துத்தருமாறு நேற்று புதன்கிழமை (02)  பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள்; தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கோரியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here