நெதர்லாந்தின் பரபரப்பான உட்ரெக் நகரும் வெறிச்சோடியது!

0
358

நெதர்லாந்து நாட்டில் அரசினால் அறிவிக்கப்பட்ட முடக்கத்தை அடுத்து, நெதர்லாந்தின் முக்கிய பல நகரங்களும் வெறிச்சோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5மணி
தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்
பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்
கப்பட்டுள்ளன. உணவகங்கள், அருந்த
கங்கள், அவசியமில்லாத கடைகள், உயர்
கல்வி நிறுவனங்கள் என்பன அடுத்த
ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி வரை மூடப்படுகின்றன. இயன்றவரை வீடு
களில் தங்கியிருங்கள். 1.5 மீற்றர் இடை
வெளி பேணுங்கள் என்று மக்களிடம்
அரசு கேட்டிருக்கிறது.

இந்நிலையில் நெதர்லாந்தின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான உட்ரெக் நகரமும் இந்தப் பண்டிகைக் காலத்தில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

படங்கள்- தீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here