யாழில் தொடரும் வன்முறை: பரமேஸ்வரா சந்தியில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!

0
310

யாழில்பொருளாதார மற்றும் நோய்த் தாக்கப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது வாள்வெட்டுச்சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகள் அதிகரித்துள்ளன.

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சினிமா பாணியில் கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்று(15)  பகல் 10.30  மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு உந்துருளிகளில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து  வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , பலர் முன்னிவையில் துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here