தாயகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் ஆரம்பம்!

0
197

பலத்த கெடுபிடிகளின் மத்தியில் சற்று முன்னர் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கரின் இல்லத்தில் சுடரேற்றலோடு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகைச் சுடரேற்றினார் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயார். அவரோடு இணைந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளிட்டோர் மாவீரன் லெப்.சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here