யாழ்.பல்கலையில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை நாள் கொண்டாட்டம்!

0
287


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் அகவைகாண் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கட்டிகை வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று தமிழீழ தேசியத் தலைவரின் 67ஆவது அகவைகாண் நாளாகும்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்தை வரைந்து அதன்முன் கேக் வெட்டி அகவைகாண் நளைக் கொண்டாடியுள்ளனர்.

அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர் , காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி அகவைகாண் நாளைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here