மூத்த ஊடக ஆசான் ம.வ.கானமயில்நாதன் சாவடைந்தார்!

0
495

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் – சஞ்சீவி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் அவர்கள் இன்று (22.11.2021) திங்கட்கிழமை தனது 79ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் அவர்கள்1942ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.

உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் இவரும் ஒருவர்.

பிரான்சின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் , விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியான சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here