யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைபத்தூபிப் பகுதியில் இன்று 9 ஆவது நாள் வியாழக்கிழமை பிற்பகல் நினைவேந்தல் மேற்கொள்ள வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மீது சிறிலங்கா காவல்துறையினர் கடும் தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட நாடாடுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் மீது சிறிலங்கா காவல்துறைக் காடையர்கள் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்து இழுத்துச்சென்றுள்ளனர்.
பெண் உறுப்பினர்கள் மீதும் ஆண்காவல்துறையினர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கடந்த நாட்களில்;அமைதியான முறையில் தியாக தீபத்தை நினைவேந்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தால் தமிழ் மக்கள் கொதித்துப்போயுள்ளனர்.
(எரிமலைக்காக கந்தரதன்)
Home
ஈழச்செய்திகள் யாழ். நல்லூரில் தியாக தீபத்தை நினைவேந்தியவர்கள் மீது சிறிலங்கா காடையர்கள் தாக்குதல்!