திலீபன் எனும் அணையா விளக்கு!

0
671

தீயினில் எரியாத தீபமே -திலீபா!
பாரினில் உன்போல் யாருண்டு பார்த்தீபா !
பசியெனும் தீ அடிவயிற்றில் எரிந்த போதும் தமிழினத்தின் விடுதலைக்காக , மருத்துவக் கல்வியினைத் துறந்து , மருத்துவ மாணவர்களுக்காகவும் ,
ஊணை உருக்கி உயிரை ஒளியாக்கி- அணையா விளக்காய் – எம் மனதில்
என்றென்றும் நிலைத்து விட்டீர் ஈகச் சுடரே!
ஊரெழு மண் ஈன்றெடுத்த வைரமே
தமிழீழத் தாயவளின் – வீரப் புதல்வனே
உங்கள் ஈகத்திற்கு நிகர் வேறுண்டோ இவ்வுலகில்.
தமிழினத்தின் குலவிளக்கே நீங்கள்.
பூமிப் பந்து சுழலும் வரை
வாழும் ஐயா – உங்கள் ஈகம்.
நிறைவேறும் – உங்கள் கனவு.

எரிமலைக்காக இளவாலையூர் கவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here