வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு!

0
321

பாடித் திரிந்த எங்கள் பாசங்கள்
ஓடிச்சென்று பங்கருக்குள் புகுமுன்
தேடி வந்த கிபீர் குண்டுகள்
துடிக்க வைத்து துளைத்துச் சென்றதே

வெடித்துச் சிதறிய குண்டால்
அடிவயிறும் கிழிந்து பதறிப் பதறியே
பயத்தோடே மரணத்தை அடைந்தனரே
எம் தேசத்தின் நேசங்கள்

சேர்த்து வைத்த ஆசையெல்லாம்
கனவாகிப் போக
ஓசை இன்றி உடல் மட்டும்
உயிரற்று வெறுமையானதே

கண்டவை கனவாகி போகாதா
கேட்டவை பொய்யாகிப் போகாதா
ஏங்கி ஏங்கியே நெஞ்சம் நோகுதே
தாங்கித் தாங்கியே வலியும் கூடுதே

ஈழத்தின் நாளைய கற்றூண்கள்
ஈனரின் கோரத் தாண்டவத்தில்
ஒளி இழந்த வெண் புறாக்கள்
வலி சுமந்த தேசக் குழந்தைகள்

பூக்கும் முன்னே பறிக்கப்பட்ட
மொட்டுக்கள்
எம் தேசத்தின் அழகு மாணிக்கங்கள்
நாளைய ஈழத்தின் நவரத்தினங்கள்
இனவெறிக்கு இரையான இளம் குருத்துக்கள்

கருகிய எம் செந்தளிர்கள்
உருகிய தமிழ் குலக் கொழுந்துகள்
கரம் கூப்பி தொழுகின்றோம்
கண்மணிகளே எம் தேசத் குயில்களே….

அருந்தமிழ்.
14/08/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here