வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனாவிற்குப் பலி!

0
196

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று(11) உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியானதையடுத்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது சடலம் கொவிட் விதிமுறைகளை பின்பற்றி இன்று மின்தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here