பிரான்ஸ் le bourget நகரில் மீண்டும் கோவிட் தடுப்பூசி ஏற்றும் முகாம்!

0
390

பிரான்சில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான 93 பிரிவின் le bourget நகரில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் முகாம் மீண்டும் கடந்த 06.08.2021 வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றது.

குறித்த தடுப்பூசி ஏற்றும் முகாம் எதிர்வரும் 13.08.2021 வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 11.00 மணிமுதல் இரவு 20.00 மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

முன்னனுமதி இன்றி குறித்த முகாமில் தடுப்பூசி ஏற்றப்படுவதால் பலரும் பெரும் பயனடைந்துள்ளனர்.

குறித்த முகாமில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி ஏற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here