இனமானத் தமிழர்கள் இதயங்களையாளும் கலங்கரை விளக்குகள்….!

0
283

வீரமுகவரிகள்.

காற்றென உருவம் தந்து…..

கடலென வீரம் கண்டு…..

கரும்பென இதயம் கொண்டு….

இரும்பெனப் பாய்ந்து பகைவர் கதையை முடித்த எம்மினக் கதாநாயகர்கள்…..

கனவு நிறைவேறிய முதல் நாளின் நினைவது சுமந்த நாள் இன்று…

உயிரை துச்சமென மதித்து..

காற்றோடு காற்றாக…
கடலோடு கடலாக….
தரையோடு தரையாக…..

சங்கமித்துப்போன எம் சந்ததியின் வீரமுகவரிகள்…..

இனமானத் தமிழர்கள் இதயங்களையாளும் கலங்கரை விளக்குகள்….

சாவுக்கும் அஞ்சாத சரித்திரநாயகர்கள்…

சந்ததி வாழ்வுக்காய் சாவதே வாழ்வெனக் கொண்டவர்கள்…..

“கரும்புலி வீரர்கள் “தடைகளையகற்றியே பெரும் சாதனை படைத்தவர்….

உலகத்தமிழர்கள் வாழ்வியலில் அரும்பெரும் வீரகாவியம் வரைந்தனர்…..

என்றும்
அழியாத உயிரோவியமாய் எம்மினத்தின் காவல்தெய்வங்களாய் வாழ்வீர்கள்……

இன்னாளில்
உங்கள் வீரத்தடங்களின்-முன்னே சிரம்தாழ்த்தி
நினைவுகளால் அகம்நிறைத்துக் கொள்கின்றோம்…….

து.திலக் (கிரி),
05.07.2021.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here