யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைப்பு!

0
387

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 ஆக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 6ஆக குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்துக்கு புதிதாக ஒரு நாடாளுமன்ற ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது கம்பஹா மாவட்டத்தில் 18 நாடாளுமன்ற ஆசனங்கள் காணப்படும் நிலையில், அது 19ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கையில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வருடாந்தம் மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here