கிளி­நொச்சியில் கஞ்­சா­வுடன் திருடன் : மக்­களால் மடக்கிப் பிடிப்பு­!­

0
1043

Welcome_To_Kilinochchiகிளி­நொச்சி இர­ணை­ம­டுவில் கஞ்­சா­வுடன் திருடன் ஒருவன் மக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று இடம்­பெற்­றது.
இது தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
இர­ணை­மடு சந்­திக்­க­ரு­கி­லுள்ள பிராந்­திய பிரதி பொலீஸ்மா அதிபர் காரி­ய­லா­யத்­திற்கு பின்­பு­ற­மாக வீட்டில் யாரும் இல்­லாத நிலையில் கூரையின் ஊடாக நுழைந்து திருடன் உரி­மை­யாளர் வீட்­டிற்கு திரும்பும் சத்தம் கேட்டு அரு­கி­லுள்ள பற்­றைக்குள் மறைந்­தி­ருந்­துள்ளான். அதனைத் தொடர்ந்து வீட்டின் உரி­மை­யா­ள­ருடன் அய­ல­வர்கள் நடத்­திய தேடு­தலில் குறித்த திருடன் பற்­றைக்­குள்­ளி­ருந்து தப்­பி­யோட முயற்­சித்­த­போது மடக்கிப் பிடிக்­கப்­பட்டான். அவ­னிடம் 50 கிராம் கஞ்சா மீட்­கப்­பட்­டது.
19 வயது மதிக்­க­த்தக்க கிளி­நொச்சி பொன்­னகர் கிரா­மத்தை சேர்ந்த குறித்த நபர் பொலிஸாரிடம் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here