தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய  சிறிலங்கா கடற்படை!

0
203

NAVYகச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை  அங்கு சென்ற  சிறிலங்கா கடற்படையினர் தமது சிறிய ரோந்துக்கப்பல்களை கொண்டு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது கப்பல்களின்  அனைத்து கொண்டு மிக வேகமாக வந்த இலங்கை கடற்படையினர் தங்களின் படகுகளில் மோதி சேதப்படுத்தினர்.

மேலும் இந்த சம்பவம் இடம்பெறும் போது இந்திய கடற்படை தமக்கு அருகில் நின்றதாகவும், அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 6 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தமிழகம் திரும்பிய பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here