இறப்பிலும் இணைபிரியாத இரட்டையர்கள்!

0
370

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில், 3 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து பிறந்தவர்கள் இரட்டை சகோதரர்கள், ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரெட் ஜார்ஜ் கிரிகோரி ஆகிய இருவரும் ஒன்றாய் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். படித்தார்கள். பொறியியலாளர் ஆனார்கள். கடந்த மாதம் 23ஆம் திகதி தங்கள் 24-வது பிறந்தநாளை ஆனந்தமாகக் கொண்டாடினார்கள்.

ஆனால் கடந்த 1 ஆம் திகதி இருவரையும் கொரோனா தாக்கியது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி இறந்து விட்டார்.

ஜோபிரெட் இறந்த அதே மருத்துவமனையில் அவரது சகோதரர் ரால்பிரெட் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

ஆனால் மறுநாள் பொழுது விடியவும், அவரது வாழ்வும் முடிந்தது. அவரும் இறந்து விட்டார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், பிந்தைய பாதிப்பாக வந்த நுரையீரல் தொற்றால் பலியாகி இருப்பது அந்தக் குடும்பத்தையே தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here